Thursday, August 27, 2009

சுழல் கழிவறை மறக்க முடியுமா : (முதல் பதிவு )

முதல் பதிவு

அண்மையில் ஈழத்து பதிவர் சந்திப்பை இணையத்தில் பார்த்த எனக்கு நானும் வலை பதிவு எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பதிவுக்கு என்ன பெயர் வைக்கலாம் எதை பற்றி முதல் பதிவு எழுதலாம் என்று குழம்பிய எனக்கு ஞாபகம் வந்தது எமது பாரம்பரிய சொத்து "வடலி" தான் அதனால் அதையே எனது தளத்தின் பெயர் ஆக வைத்து முதல் பதிவையும் எழுதுகிறேன்.

பனை

பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில் வழங்கப்படினும், தொல்காப்பியத்தில் குறித்துள்ளபடியும், இன்றைய தாவரவியல் அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும்.


விஜயகாந்த் பஞ்ச்

ஆசியா வில இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், கேரளா, கோவா, மும்பை தொடக்கம் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச் சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.
இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருக்கு
இதில 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில இருக்கு

இலங்கையில் பனை

இலங்கையில பனைகள் தமிழர் வாழும் பிரதேசமான வடக்குப் பகுதியிலேயே வளர்கின்றன.
1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில இலங்கையில வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்திச்சு உள்நாட்டுப் போரினால் மட்டும், 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கு , 30 லட்சம் பனைகள் மீதிய இருக்கு


பனை குறிப்பாய் வடலியின் முக்கிய பாவனை பொதுவா யாழ்ப்பாண மக்களுக்குதெரியும் காலமை தேவை . இதை நான் இடம்பயர்ந்த காலத்தில் உணர்ந்தேன். சுழல் கழிவறை மறக்க முடியுமா அந்த நாட்கள் பாடசாலை பருவத்தில் பனங்காடுகள் வயல்வெளிகள்


எனது முதல் பதிவு குறைகள் இருந்தால் மன்னிக்கவும்

3 comments:

Anbu said...

உங்களை தமிழ் வலையலகிற்கு அன்புடன் வரவேற்கிறோம்...

பெருங்காயம் said...

வாங்க..வந்து கலக்குங்க...
நட்புடன்
விஜய்

shazini said...

மஹா மொக்கை பதிவுக்கு 12 வோட் கிடைச்சது மிக பெரிய சந்தோசம் நான் இதை எதிர்பார்கவில்லை நன்றி

Post a Comment