Sunday, August 30, 2009

பாடசாலையில் படித்த விஹாரமஹா தேவி பூங்காவும் எனது காலைபொழுதும்


மீண்டும் பதிவு எழுத ஆர்வமாக இருக்க எதை பற்றி எழுவது என்று குழம்பி போய் இருந்தன். அனால் எனது முதல் பதிவுக்கு கிடைத்த 14 ஹிட் களை நினைக்கவும் அதை வாசிஇதவர்களின் நிலையயும் நினைக்க கந்தசாமி பார்து வெந்தசாமிகள் போல் ஒவ்வொருவரது கடுப்பும் எனது இரவு தூக்கத்தை கெடுத்தது.

எனினும் மனதுக்குள் நான்கு ஐந்து விடையங்களுடன் சிந்தித்து கொண்டு இருந்த நான், அன்று ஒரு நாள் விஹரமஹா தேவி பார்க்கு நுழையும் சந்தர்பம் கிடைத்தது காலை நேரம். பூங்கவிட்குள் நுழையும் போது நான் சிறு வயதில் தமிழ் பாடத்தில் படித்தவை ஞாபகம் வந்தது. இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு அப் பூங்காவில் உள்ள மின்சார கார் பற்றி படித்து .



காலை 7.35

பூங்காவிற்குள் நுழைந்தேன் அழகிய புத்தர் சிலை தங்கமுலாம் இடப்பட்டு காட்சி அளித்தார், இந்துவான எனக் கை எடுத்து வணங்க தூண்டும் அழகிய சிலை. அந்த சிலை புதரை ஞாபகம் ஊட்டவில்லை புத்தரின் நாமத்தால் நமை கொல்லும் பாரினவாதிகள்தெரிந்தனர்

காலை 7.37
அப்படியே வாசலை தாண்டி பூங்கவிட்குள் மேலும் நடக்க தொடங்கினன் . பூங்கா முழுவதும் நடை பழக இந்திய சினமாவில் varuvathu போன்று ஹோர்லிக்க்ஸ் அங்கிள் , ஹமாம் ஆன்டி போன்ற கேரக்டர்கள் track suit ,t-shirt, shoe அணிந்து திரிவதை காண முடிந்தது.

காலை 7.39

அப்படியே நேரே நடந்த நான் ஒரு U-turn அடித்து மறுபடியும் வாசலை நூக்கி நடக்க தொடங்கினேன் . அப்பொழுது திடீர் என எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது மூங்கில் மரத்துக்குள் பின் இருவர் தமது உயரங்களை அளந்து கொண்டு இருந்தனர்.அதை பார்த்த வேர்க்காத இடம் எல்லாம் வேர்க்க தொடங்கியது , கட்டு படுத்திகொண்டு மேலும் எனது பயணத்தை தொடங்கினன் .

காலை 7.40

சிறிது துரம் நடந்த எனக்கு மீண்டும் அதிர்ச்சி மேலும் இருவர். மனதை கட்டு படுத்தி கொண்டு மீண்டும் புதரை நோக்கி நடக்க தொடங்கினன், இவை எல்லாம் உனக்கு பின்னாலா நடக்குது எண்டு கேட்க அல்ல, பூங்காவை விடு வெளியேற .



பூங்காவை விட்டு வெளி ஏறிய பின்பு தான் சிந்தித்தேன் . இவை எல்லாம் ஈழத்தில் நடந்து இருந்தால் அடுத்த நாள் பத்திரிகைஇல் கறுப்பு பெட்டியுடன் ஒரு செய்தி. கலாச்சாரத்தை சீரழிக்கும் முகமாக செயல் பட்ட இளைஞனும் யுவதியும் கலாச்சாரம் பேணும் இளைஞர்களால் எச்சரிகபட்ட்னர் . இதில் இருந்து தெரிகிறதா அவர்கள் வேறு நாம் வேறு. இவர்கள் நம் சகோதர இனத்தவர் அல்லஎன்று



Thursday, August 27, 2009

வாழ்வில் மிக துக்கமான நொடிகள்

வாழ்வில் மிக துக்கமான நொடிகள்


இதுவா......

..
...
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
அல்லது இதுவா .........?????????????

சுழல் கழிவறை மறக்க முடியுமா : (முதல் பதிவு )

முதல் பதிவு

அண்மையில் ஈழத்து பதிவர் சந்திப்பை இணையத்தில் பார்த்த எனக்கு நானும் வலை பதிவு எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பதிவுக்கு என்ன பெயர் வைக்கலாம் எதை பற்றி முதல் பதிவு எழுதலாம் என்று குழம்பிய எனக்கு ஞாபகம் வந்தது எமது பாரம்பரிய சொத்து "வடலி" தான் அதனால் அதையே எனது தளத்தின் பெயர் ஆக வைத்து முதல் பதிவையும் எழுதுகிறேன்.

பனை

பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில் வழங்கப்படினும், தொல்காப்பியத்தில் குறித்துள்ளபடியும், இன்றைய தாவரவியல் அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும்.


விஜயகாந்த் பஞ்ச்

ஆசியா வில இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், கேரளா, கோவா, மும்பை தொடக்கம் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச் சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.
இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருக்கு
இதில 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில இருக்கு

இலங்கையில் பனை

இலங்கையில பனைகள் தமிழர் வாழும் பிரதேசமான வடக்குப் பகுதியிலேயே வளர்கின்றன.
1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில இலங்கையில வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்திச்சு உள்நாட்டுப் போரினால் மட்டும், 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கு , 30 லட்சம் பனைகள் மீதிய இருக்கு


பனை குறிப்பாய் வடலியின் முக்கிய பாவனை பொதுவா யாழ்ப்பாண மக்களுக்குதெரியும் காலமை தேவை . இதை நான் இடம்பயர்ந்த காலத்தில் உணர்ந்தேன். சுழல் கழிவறை மறக்க முடியுமா அந்த நாட்கள் பாடசாலை பருவத்தில் பனங்காடுகள் வயல்வெளிகள்


எனது முதல் பதிவு குறைகள் இருந்தால் மன்னிக்கவும்