Monday, October 12, 2009

சத்ரபதியும் இளையதலைவலியும்



அண்மையில் இளைய தலைவலியின் வில்லுவை பதிவர்களும் பத்திரிகைகாரர்களும் உடைத்து போட்ட பிறகு வேடைகாரனை துரத்த தயார் ஆகின்றன இந்த மாடர்ன் இணைய ராஜாக்கள்

இந்த நேரத்தில் பழைய ஒரு பாக்கியை தீர்த்துவிட்டு போக இங்கு வந்துவிட்டேன்

கடந்த மாதம் சத்ரபதி என்ற தெலுகு திரைப்படம் பார்க்க சந்தர்பம் கிடைத்தது , பிரபாஸ் ஸ்ரேயா ,பிரதீப் ராவந் நடித்த தெலுகு திரையுலகத்தின் முடிசூடா மனர்களில் ஒருவரான s s ராஜமௌலி இயக்கிய திரைப்படம் , அண்மையில் சிரஞ்சீவின் மகனை வைத்து மாபெரும் வெற்றிப்படமான மகாதீரவை இயக்கியவர். இவர் இயக்கிய அணைத்து படம்களும் ஹிட் இதுவே இவரின் சிறப்பு


இப்பொழுது சத்ரபதி கதைக்கு வருவோம், படம் ஈழத்தில் ஆரம்பிக்கிறது , பிரபாஸ் அவரது தம்பி தாய் ஈழத்தில் இருக்கிறார்கள் , அங்கு ஏற்படும் ஒரு கலவரத்தால் தம்பி, தாயை பிரிந்து பிரபாஸ் தனியாக ஒரு படகிலும்,அவனது தாய் ,தம்பி அவன் இறந்துவிடான் என்று எண்ணி வேறொரு படகிலும் இந்தியா செல்கின்றனர் , அங்கு அவர்கள் முகாம் போன்றொரு இடத்தில் எப்படி வாழ்கிறார்கள் , அவன் அவனது தாயை கண்டானா, அவளது தாய்க்கு அவன் உயிருடன் இருபது தெரியுமா என விறுவிறுப்பாக கதை நகர்கிறது.

ஆர்வம் உள்ளவர்கள் இந்த youtube சுட்டி ஊடக பார்க்கவும்
http://www.youtube.com/watch?v=nvvPyUSVilc


ஆரம்பத்திலே குருவிக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் உள்ளதாக கூறப்பட்டது . பின்பு இப்படத்தின் இரண்டாம் பாகம் குருவியால் சுடப்பட்டது எனப்பட்டது . உண்மை என்ன

வழமையாகவே பிரின்ஸ் மகேஷ் பாபு வின் திரைப்படங்களை ரீமேக் செய்து புகழை தேடிக்கொள்வது நமது இளைய தலைவலியின் வழமை அனால் அண்மைக்காலமாக மகேஷ்பாபு தனது படங்களை டப் செய்து வெளியிடுவதும் அவை ஹிட் ஆவதும் இளையதலைவலியின் வயிற்றில் புளியை கரைக்கும் செயலாகும். இது இப்படி இருக்க ஆந்திரா சென்று பங்காரம் மூலம் மரண அடி வாங்கிய ஹட்ரிக் இயக்குனர் தரணி இவர்கள் மீண்டும் இணையும் போது தரணி ஆந்திராவில் இருக்கும் போது சக்கை போடு போட்ட சத்ரபதி திரைபடத்தை ரீமேக் பண்ண எண்ணியிருந்தார். அனால் அதை ரீமேக் பண்ணுவதில் பல சட்ட சிக்கல் கள் இருந்தன
1) வழமையாக மகேஸ்பாபு திரை படங்களை வாங்கும் விஜய் மகேஷ்பாபுவின் போட்டியாக கருதப்படும் பிரபாஸின் படத்தை வாங்குவதால் எதிர்காலத்தில் மகேஷ்பாபுவின் படங்களை வாங்கமுடியாமல் போகலாம்
2) தரணிக்கு உடனடியாக விழுந்த மார்கெட்டை நிலை நிறுத்த சொந்த கதை வேண்டும்

குருவியின் பின்னணி

ஆந்திராவில் அடி வாங்கிய தரணி ATM அடி வாங்கிய விஜய் இருவரும் இணைய உதையநிதியின் பணம்
சந்தர்பத்தை பயன் படுத்திய விஜய் , தரணி சத்ரபதியை குருவியாகினார்கள்

இப் படம் சற்றபதியின் ஒட்டுமொதமன் மாற்று வடிவமே தவிர வேறு ஒன்றும் இல்லை அனால் அந்த நல்ல கதையை அப்படியே ரீமேக் பண்ணி இருக்கலாம் அனால் அரசியல் சார்ந்த தயாரிப்பாளர் அதனால் கதையை ஆந்திர வுக்கு மாற்றி இருக்கிறார்கள்

அனால் ஆண்டவன் வந்து கேட்டால் ஈழத்தமிழருக்கு நாடு கேட்பானே என்பது எல்லாம் சும்மா பந்தா , அப்படி கேட்பவனாக இருந்தால் சத்ரபதி திரைப்படத்தில் காடப்படும் ஈழ காட்சிகளையும் அகதிகள் படும் முகாம்களில் பாட்டையும் அப்படியே காட்டி இருக்கலாம் தானே , சமந்தம் இல்ல தெலுகு காரனே படம் எடுக்கிறான்.


மொத்தத்தில் சத்ரபதி ஒரு உண்மையான ஈழத்து கதை , குருவி பார்த்து நொந்து போனவர்கள் சத்ரபதியை பாருங்கள் ஒரே கதை பட் வித்தியாசம் புரியும் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று





Monday, September 7, 2009

புல்லட்பாண்டி இன் காதல்





சுமார் ஒரு கிழமை இருக்கும் , எனக்குள் எதோ இனம் புரியாத மாற்றம் சந்தோசம் , கண்களுக்குள் ஒரு உருவம் தோன்றி மறைந்து கொண்டு இருந்தது . இரவு தூக்கம் இல்லை . நீண்ட நாள் பழகிய உறவை பிரிந்த உணர்வு . மனதை ஒருனில்லை படுத்த கோவிலுக்கு புறப்பட தயார் ஆனன்



புறப்பட்டு பேருந்தில் ஏறி கண்டக்டர் இடம் பணத்தை கொடுத்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்த நான் அப்படியே தூங்க ஆரம்பித்து விட்டன்

//------------------------------------------------------------------------------

Flashback



காலம் : ஒரு கிழமைக்கு முதல்
இடம் : புல்லட் இன் இல்லம்

எனது உறவு காரர் திருமண வீடிட்காக சென்று இருந்தன். அப்பொழுது எனத்து அண்ணி பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவர்களை பார்த்து விட்டு அங்கு இருக்கும் தம்பிக்கு டி கொடுத்து விட்டு வா என கூறினார். நானும் அழகிய ஒரு பையன் இருப்பான் ஜொள்ளு விடலாம் என்ற நினைப்பில் அங்கு நுழைந்தால் எனக்கு காத்திருந்தது அதிர்ச்சி ஒரு சுமாரான ஆளு ஜொள்ளுவடிய என்னை நோக்கினான்

//----------------------------------------------------------------------------------------------

டெக்னிக தெரிந்த ஆம்பிளைங்கள் , எங்களை மாதிரி பொம்பிளைகளின் வீக் பொயிண்டை பிடித்துவிட்டார்கள்.குவாடர் அடிச்ச குரங்கு ஆப் அடிச்ச ஆடு மாதிரி நெளின்ச்சர். அப்புறம் என்னிடம் இருந்த தேநீர் கோப்பையை நீட்ட இதுவரை பெண்களை பார்க்காத மாதிரி அவளவு பவ்வியமா நடந்து கொண்டார்

தேநீரை அருந்துவது மாதிரி குனிந்து என்ன ஒரு சுட்டு எரிக்கும் பார்வை பார்த்தார். நானும் வெட்டகபடுவது போன்று நடித்தேன். பின்னர் கோப்பையை வேண்டி கொண்டு விடை பெற்றன்

//------------------------------------------------------------------------------

காலம் : ஒரு கிழமைக்கு முதல் - 1 நாள்
இடம் :அதே பழைய புல்லட் இன் இல்லம் (முன்னையதை விட கேவலமாக )

மறு நாள் புல்லட் குழந்தை களுடன் விளையாடி கொண்டு இருந்தார். நான் உத்தரவின்றி அறையுள் நுழைந்ததால் தடுமாறிய புல்லட்ஐ இன்னும் மறக்க முடிய வில்லை. சட்டென்று வணக்கம் கூறினன் , அவரும் வணக்கம் கூறினர் அனால் அவரது பேச்சில் ஒரு நடுக்கம் தெரிந்தது அப்பொழுது தான் அவரை புரிய ஆரம்பிதேன். பெண்களின் வாடை படாத ஒரு மனிதர் போல தோன்றியது . அவரின் செயல் பாடு களை மறை முகமா இருந்து ரசிக்க ஆரம் பித்தன்

புல்லட் இன் ஒவ்வொரு செயல் பாடும் சிறுவர்களை விட சிறு பிள்ளை தனமாக இருந்தது



//--------------------------------------------------------------------------------------------

நாட்கள் கடந்தது

திருமண வைபவம் முடிந்தது

புல்லட் ஐ பிரியும் நேரம் நெருங்கியது. விடை பெறுவதை கூற புல்லேடின் அறையை நோக்கி புறப்படன். நான் வருவதை அறிந்த புல்லட், சட்டென ஓடிவிட்டார். அப்புறம் ஒரு பிரிவு அட்டை யுடன் வந்தார் , எனது கை நோக்கி நீட்டினார்

//------------------------------------------------------------------------------
சில மாதங்கள் கழிந்து

காலம் : ஒரு கிழமைக்கு முதல் ++ பல மாதங்கள்
இடம் : 141 பேருந்து அசைந்து கொண்டு இருந்தது

ஒருசில பயணிகளுடன் புல்லட் பயணம் செய்து கொண்டு இருந்தார் நான் அருகில் சென்று அமர்ந்து கொண்டன் . நவ நாகரிக உடையில் இருந்ததால் அவரால் அடையாளம் காண முடியவில்லை . பட் என்னை பார்த்த மனிதன் ஆரம்பத்தில் எவளவு முடியுமோ அவளவு உழைத்தார் .பின் என்னவோ புரியவில்லை மனிங் ப்லேஸ் இல பஸ் நிண்டது தான் தாமதம் இறங்கி ஓடிவிட்டார் , ஊரில நாய்க்கு கள் எரிந்து விட்டு பெடியள் சைக்கிள் மட் காட் இல கால் வைத்து வேகமா போனதுபோல போய் மறைந்தார் எனது

அந்த கதையை மாற்றி bus பதிவு எழுதுவார் எண்டு கூட நான் எதிபார்கவில்லை .

//------------------------------------------------------------------------------


today
time : 6.30
place : same bus

நகார்ந்து கொண்டிருந்த பஸ் நிறுத்த பட்டது கண்டக்டர் என்னை வந்து என்னை தட்டி எழுப்பிய போது தான் நான் புளொட் மீது கொண்ட காதல் எவளவு உண்மையானது என்று புரிந்தது ..


//------------------------------------------------------------------------------

இந்த கதையில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே உயிருடன் இருக்கும் புல்லட் உடனே யோ அல்லது இறந்த என்னடுனோ தொடர்பு பட்டால் அது தட்செயலானது

//------------------------------------------------------------------------------

என்றும் ப்ல்ல்லேடின் நினைவுகளுடன் ஓர் இதயம்




//------------------------------------------------------------------------------



Sunday, August 30, 2009

பாடசாலையில் படித்த விஹாரமஹா தேவி பூங்காவும் எனது காலைபொழுதும்


மீண்டும் பதிவு எழுத ஆர்வமாக இருக்க எதை பற்றி எழுவது என்று குழம்பி போய் இருந்தன். அனால் எனது முதல் பதிவுக்கு கிடைத்த 14 ஹிட் களை நினைக்கவும் அதை வாசிஇதவர்களின் நிலையயும் நினைக்க கந்தசாமி பார்து வெந்தசாமிகள் போல் ஒவ்வொருவரது கடுப்பும் எனது இரவு தூக்கத்தை கெடுத்தது.

எனினும் மனதுக்குள் நான்கு ஐந்து விடையங்களுடன் சிந்தித்து கொண்டு இருந்த நான், அன்று ஒரு நாள் விஹரமஹா தேவி பார்க்கு நுழையும் சந்தர்பம் கிடைத்தது காலை நேரம். பூங்கவிட்குள் நுழையும் போது நான் சிறு வயதில் தமிழ் பாடத்தில் படித்தவை ஞாபகம் வந்தது. இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு அப் பூங்காவில் உள்ள மின்சார கார் பற்றி படித்து .



காலை 7.35

பூங்காவிற்குள் நுழைந்தேன் அழகிய புத்தர் சிலை தங்கமுலாம் இடப்பட்டு காட்சி அளித்தார், இந்துவான எனக் கை எடுத்து வணங்க தூண்டும் அழகிய சிலை. அந்த சிலை புதரை ஞாபகம் ஊட்டவில்லை புத்தரின் நாமத்தால் நமை கொல்லும் பாரினவாதிகள்தெரிந்தனர்

காலை 7.37
அப்படியே வாசலை தாண்டி பூங்கவிட்குள் மேலும் நடக்க தொடங்கினன் . பூங்கா முழுவதும் நடை பழக இந்திய சினமாவில் varuvathu போன்று ஹோர்லிக்க்ஸ் அங்கிள் , ஹமாம் ஆன்டி போன்ற கேரக்டர்கள் track suit ,t-shirt, shoe அணிந்து திரிவதை காண முடிந்தது.

காலை 7.39

அப்படியே நேரே நடந்த நான் ஒரு U-turn அடித்து மறுபடியும் வாசலை நூக்கி நடக்க தொடங்கினேன் . அப்பொழுது திடீர் என எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது மூங்கில் மரத்துக்குள் பின் இருவர் தமது உயரங்களை அளந்து கொண்டு இருந்தனர்.அதை பார்த்த வேர்க்காத இடம் எல்லாம் வேர்க்க தொடங்கியது , கட்டு படுத்திகொண்டு மேலும் எனது பயணத்தை தொடங்கினன் .

காலை 7.40

சிறிது துரம் நடந்த எனக்கு மீண்டும் அதிர்ச்சி மேலும் இருவர். மனதை கட்டு படுத்தி கொண்டு மீண்டும் புதரை நோக்கி நடக்க தொடங்கினன், இவை எல்லாம் உனக்கு பின்னாலா நடக்குது எண்டு கேட்க அல்ல, பூங்காவை விடு வெளியேற .



பூங்காவை விட்டு வெளி ஏறிய பின்பு தான் சிந்தித்தேன் . இவை எல்லாம் ஈழத்தில் நடந்து இருந்தால் அடுத்த நாள் பத்திரிகைஇல் கறுப்பு பெட்டியுடன் ஒரு செய்தி. கலாச்சாரத்தை சீரழிக்கும் முகமாக செயல் பட்ட இளைஞனும் யுவதியும் கலாச்சாரம் பேணும் இளைஞர்களால் எச்சரிகபட்ட்னர் . இதில் இருந்து தெரிகிறதா அவர்கள் வேறு நாம் வேறு. இவர்கள் நம் சகோதர இனத்தவர் அல்லஎன்று



Thursday, August 27, 2009

வாழ்வில் மிக துக்கமான நொடிகள்

வாழ்வில் மிக துக்கமான நொடிகள்


இதுவா......

..
...
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
அல்லது இதுவா .........?????????????

சுழல் கழிவறை மறக்க முடியுமா : (முதல் பதிவு )

முதல் பதிவு

அண்மையில் ஈழத்து பதிவர் சந்திப்பை இணையத்தில் பார்த்த எனக்கு நானும் வலை பதிவு எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பதிவுக்கு என்ன பெயர் வைக்கலாம் எதை பற்றி முதல் பதிவு எழுதலாம் என்று குழம்பிய எனக்கு ஞாபகம் வந்தது எமது பாரம்பரிய சொத்து "வடலி" தான் அதனால் அதையே எனது தளத்தின் பெயர் ஆக வைத்து முதல் பதிவையும் எழுதுகிறேன்.

பனை

பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில் வழங்கப்படினும், தொல்காப்பியத்தில் குறித்துள்ளபடியும், இன்றைய தாவரவியல் அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும்.


விஜயகாந்த் பஞ்ச்

ஆசியா வில இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், கேரளா, கோவா, மும்பை தொடக்கம் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச் சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.
இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருக்கு
இதில 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில இருக்கு

இலங்கையில் பனை

இலங்கையில பனைகள் தமிழர் வாழும் பிரதேசமான வடக்குப் பகுதியிலேயே வளர்கின்றன.
1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில இலங்கையில வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்திச்சு உள்நாட்டுப் போரினால் மட்டும், 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கு , 30 லட்சம் பனைகள் மீதிய இருக்கு


பனை குறிப்பாய் வடலியின் முக்கிய பாவனை பொதுவா யாழ்ப்பாண மக்களுக்குதெரியும் காலமை தேவை . இதை நான் இடம்பயர்ந்த காலத்தில் உணர்ந்தேன். சுழல் கழிவறை மறக்க முடியுமா அந்த நாட்கள் பாடசாலை பருவத்தில் பனங்காடுகள் வயல்வெளிகள்


எனது முதல் பதிவு குறைகள் இருந்தால் மன்னிக்கவும்